அரசியல்

"சட்டத்தின் துணையோடு பொய் வழக்கை எதிர்கொள்வேன்" - முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

தந்தி டிவி

ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் லஞ்ச ஓழிப்பு துறையினர் 14மணி நேரம் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 14 மணி நேரம் கழித்து நிறைவு பெற்றது. இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்த பின், செய்தியாளர்களை சந்தித்த சேவூர் ராமச்சந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணையோடும், சட்டத்தின் துணையோடும் இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்