தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 3 ஆண்டுகளாக போராடி வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். அன்புமணி ராமதாஸின் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி, உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறிய நிலையில், அது தெரியாது போல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக கூறினார்.