அரசியல்

"நீதித்துறையினரே நீதிபதிகள் குறித்து விமர்சனம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை

நீதித்துறையை சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேட்டியளித்துள்ளதாகவும்,

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் முன் முறையிட்டார். அப்போது அவர், நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் விமர்சனம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, நீதித் துறை சார்ந்தவர்களே, தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித் துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும் என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ