#iranvsus #india ஈரானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் உடனே வெளியேற தூதரகம் அறிவுறுத்தல் ஈரான் நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள், யாத்ரீகர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கிடைக்கக்கூடிய விமான சேவைகள் மூலம் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்ட பகுதிகளை தவிர்த்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசர உதவிக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.