அரசியல்

மாநில அரசுகளுக்கு முழு ஜிஎஸ்டி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

நடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

தந்தி டிவி

2019-2020ம் நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக பல்வேறு மாநில அரசுகளுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடாக 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது . 2017 -18 ஆம் நிதியாண்டு மற்றும் 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட கலால் வரியின் மீதம் உள்ள தொகை ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக உபயோகப்படுத்தப் படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்