அரசியல்

கஜா புயல் பாதிப்பை பார்க்க ஒருமுறைகூட மோடி வரவில்லை - மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத்

இந்தியாவை பாதுகாக்க மத்தியில் பாஜகவையும், தமிழ்நாட்டை பாதுகாக்க அ.தி.மு.க. அரசையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவை பாதுகாக்க மத்தியில் பாஜகவையும், தமிழ்நாட்டை பாதுகாக்க அ.தி.மு.க. அரசையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கஜா புயல் பாதிப்பில் ஒருமுறைகூட தமிழகம் வராத மோடி, ஓட்டுக்காக தற்போது ஒரே மாதத்தில் நான்கு முறை தமிழகம் வந்ததாக குற்றம்சாட்டினார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த லேடியா அந்த மோடியா என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததாக குறிப்பிட்ட பிருந்தா காரத், தற்போதைய அதிமுக அமைச்சர்கள் மோடிதான் தங்கள் டாடி என்று சொல்வது சரியா? என கேள்வி எழுப்பினார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு