#ameer #tnelection2026 மதுரையில் இயக்குனர் அமீர் தனது வாக்கை பதிவு செய்தார் மதுரை அண்ணா நகர் அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், திரைப்பட நடிகரும் இயக்குனருமான அமீர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பிறகு அளித்த பேட்டியில், முதல் தலைமுறை வாக்காளர்கள் உங்களுடைய வரலாறு, வாழ்வாதாரம், அரசியலை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் சமூக ஒடுக்குமுறைகளை மாற்றுவதற்கு, இதுவரை நமக்காக உழைத்தவர்கள் யார் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என கூறினார்.