#edappadipalanisamy #tvk #admk
சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார். தவெக, ஆட்சியில் இருக்குமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், அந்தக் கட்சி ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சத்திற்கு ரீல்ஸ் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஏழைகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஆடம்பரமாகச் செயல்படும் தற்போதைய ஆட்சியாளர்களின் விபத்து ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.