பாஜகவின் முகமூடியாக அதிமுக மாறிவிட்டது என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இப்தார் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் அரணாக இருக்கும் என தெரிவித்தார். கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு மீண்டும் பாஜகவுடன் கரம் கோர்த்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சாடினார்.