Election | Erode East | "ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி அதிரடி மெசேஜ் #ErodeEast #Election #ECI #TNElections ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்ததாக புகார்கள் வந்த நிலையில், இந்த முறை அதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழுவினர் கோலமிட்டு விழிப்புணர்வவை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் தொடர்பான புகார்கள் மீது பறக்கும் படையினர் உடனடியாகக் களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.