நெடுஞ்சாலைத் துறை முறைகேட்டு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மிகப்பெரிய அளவிலான ஊழல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விசாரணையைத் தடுக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.