Dy CM Udhayanidhi Stalin | "உரிமை தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி" மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பேரதிர்ச்சியில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி நிறுத்த சிலர் சூழ்ச்சி செய்ததாகவும், அதை முதலமைச்சர் முறியடித்து பெண்களுக்கு 5,000 ரூபாய் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.