ராகுல் காந்தி முதலில் மற்றவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்கு முன், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை முதலில் கவனிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் அரசுக்கு 400 ரூபாய்க்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை அவர்கள், அதை 20 தனியார் நிறுவனங்களுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு வழங்கியதாக கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தடுப்பூசி திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்றும், பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.