அரசியல்

Rajiv Gandhi DMK | தீயாய் பரவிய ஸ்கிரீன்ஷாட்ஸ்.. ராஜீவ்காந்தி விளக்கம்

thanthitv

போலி சமூகவலைதள கணக்கை வைத்து அவதூறு என திமுக ராஜீவ் காந்தி விளக்கம் ஒருபோதும் ஒருவரிடமும் தான் தவறாக நடந்து கொண்டதில்லை என திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக, ராஜீவ் காந்தி மீது குற்றச்சாட்டை முன்வைத்து வெளியான ஸ்கீரின் ஷாட்டுகள், பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜீவ் காந்தி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிராக போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார். போலி சமூக வலைதள கணக்கை உருவாக்கும் செயலியின் லிங்கையும் இணைத்து பதிவிட்டுள்ள அவர், அதனை வைத்தே தனக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். தான் யாரிடமும் தவறாக நடந்துகொண்டதில்லை எனவும், யாருக்காவது தன் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தால், வந்து கொலை கூட செய்யுங்கள் எனவும் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு