காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகளான பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், நாதஸ்வர இசை உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்தனர்.
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.