அரசியல்

"பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தது அரசு" - திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும், நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இதே போன்ற ஒரு சம்பவம் நாகப்பட்டினத்தில் ஒரு கோயிலில் நடந்துள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகளை பாதுகாப்பது தான் நோக்கமா என்றும் கனிமொழி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி