அரசியல்

"8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு" - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ

கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் கடைசி நாளான இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஒட்டுமொத்த தமிழர்களும் வாசலில் கோலமிட தொடங்கி விட்டதாக கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்