அரசியல்

தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு

தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வவிநாயகம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் மதம் மற்றும் அரசுக்கு எதிராக கனிமொழி சொல்லாத கருத்தை போட்டோஷாப் செய்து விஷமிகள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலி கணக்கு மூலம் பரப்பப்படும் அவதூறு, தனது நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமது பெயரில் போலி கணக்கு உருவாக்கி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்