அரசியல்

தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு

தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வவிநாயகம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் மதம் மற்றும் அரசுக்கு எதிராக கனிமொழி சொல்லாத கருத்தை போட்டோஷாப் செய்து விஷமிகள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலி கணக்கு மூலம் பரப்பப்படும் அவதூறு, தனது நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமது பெயரில் போலி கணக்கு உருவாக்கி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்