அரசியல்

"அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து திமுக பயம்" - முதலமைச்சர் பழனிசாமி

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பா.ம.க நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றஞ் சாட்டினார். பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி