தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் மீது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டி உள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.