அரசியல்

டெல்லி வன்முறை : அமித்ஷா அறிக்கை - இதுவரை 2600 பேர் கைது

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு புலனாய்வு குழு வசம் 50 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அமித்ஷா தெரிவித்தார்.

தந்தி டிவி

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு புலனாய்வு குழு வசம் 50 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அமித்ஷா தெரிவித்தார்.

சாட்சியங்கள் அடிப்படையில் இரண்டாயிரத்து 600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் தனிநபர் சுதந்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 1922 பேரின் முகங்கள், மென்பொருள் உதவியுடன் தான் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆதார் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அமித்ஷா, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு