அரசியல்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி : கட்சி பதவியை ராஜினாமா செய்த பி.சி.சாக்கோ

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தந்தி டிவி
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது தவிர, அக்கட்சியின் வாக்குகளும் 4 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பி.சி.சாக்கோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சரிவு 2013 ஆம் ஆண்டு ஷீலா தீட்ஷித் முதலமைச்சராக இருந்த போதே தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து சென்று விட்டதாகவும் சாக்கோ தெரிவித்துள்ளார். அந்த வாக்குகளை காங்கிர​ஸ் திரும்பப் பெறமுடியாது என்றும், அந்த வாக்குகள் ஆம் ஆத்மி வசம் தான் நீடிக்கும் என்றும் சாக்கோ தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை