டெல்லியில் அரசுக்கு எதிராக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்திய போராட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தினர். திங்கள்கிழமை போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய இந்த தடியடி விவகாரம் குறித்து விசாரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.