அரசியல்

"டெல்லி காற்று மாசு.. பாஜக தான் காரணம்" - அமைச்சர் கோபால் ராய் குற்றச்சாட்டு

தந்தி டிவி

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட "ஸ்மோக் டவர்" செயல்படாமல் உள்ளதற்கு, பாஜகவே காரணம் என்று, டெல்லி அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மரபுகளையும் மீறி, மாசுக்கட்டுப்பாட்டு குழு தலைவராக அஸ்வனி குமாரை மத்திய அரசு நியமித்ததாக கூறினார். அவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி,உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, புகை மூட்டம் ஆய்வுக்கான கட்டணத்தை நிறுத்தியதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, ஏஜென்சிகள் ஆய்வை நிறுத்தியதுடன், கெனாட் ப்ளேஸ் பகுதியில் அமைக்கப்பட்ட புகை கோபுரமும் மூடப்பட்டதாக கூறினார். இந்த டவர் மூடப்பட்டதற்கு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுதான் காரணம் என்றும் அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்