கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பகுதி மக்கள், கஜா புயலால், 20 வருடங்கள் பின் தங்கி விட்டதாக வேதனை தெரிவித்தார்.