அரசியல்

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில், முதலமைச்சர் நாராயணசாமி மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய நாராயணசாமி, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருந்தார். இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் நாராயணசாமிக்கு சவால் விடுத்துள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் சொன்னவற்றின் அடிப்படையில், விசாரணையை தொடங்கினால் விசாரணையை எளிதாக்க முதல்வர் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி