அரசியல்

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில், முதலமைச்சர் நாராயணசாமி மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய நாராயணசாமி, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருந்தார். இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் நாராயணசாமிக்கு சவால் விடுத்துள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் சொன்னவற்றின் அடிப்படையில், விசாரணையை தொடங்கினால் விசாரணையை எளிதாக்க முதல்வர் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு