அரசியல்

கேரள முதல்வர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்: "கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை"

கொரோனா தாக்குதல், கேரளாவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கொரோனா தாக்குதல், கேரளாவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், டிஜிபி, உள்துறை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், கேரளாவில் உள்ள வெளிநாட்டினர், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல்களில் வசிக்கும் வெளிநாட்டினரின் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளை சோதிக்கவும், கொரோனா தாக்குதல் இருந்தால் விரைந்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்ட கூட்டத்தில், கொரோனா பாதிப்பு குணமடைந்த பின்னரே சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என அ​றிவுறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்