அரசியல்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல் - குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற காங்கிரசார்

வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற காங்கிரசார் தடுத்துநிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தந்தி டிவி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை இன்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தி​ல் தலையிடுமாறு கோரிக்கை வைக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்திக்கு மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரியங்கா காந்தி மற்றும் சில எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்