கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தமிழக நலன் தான் முக்கியம் என சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன் என்று குற்றம்சாட்டினார். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்தால் தான், மத்திய அரசு திட்டங்களை மக்கள் வரவேற்பார்கள் என்றும் வசந்தகுமார் குறிப்பிட்டார்.