இந்தியர் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது என்றும் இது போன்ற கஷ்டமான தருணங்களில் இந்தியர் என்பதை காண்பிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில், இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தியா வெறுப்பால் அழிவதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மோடி மற்றும் அமித்ஷாவால் கட்டவிழ்க்கப்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக போராட இன்று மாலை 3 மணிக்கு, ராஜ்காட்டில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.