தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஒரே நாளில் தேர்தல் - காங்., கோரிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ஆம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும் வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடத்துவது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சுமுகமாக நடைபெறவும், குளறுபடிகளைத் தவிர்க்கவும் இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.