குரூப் 2ஏ தேர்வில் முதலமைச்சரை பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2ஏ முதன்மைத் தேர்வில், தமிழக முதலமைச்சரை எந்த திட்டத்திற்காக மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக, நீங்கள் நலமா?, மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன...