ஊராட்சி தலைவர்களுக்கு பைக் வழங்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மாவட்ட, ஒன்றிய அலுவலகங்களுக்கு பேருந்தில் செல்லும் ஊராட்சி தலைவர்களுக்கு, குறைந்தபட்சம் பைக் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், நிலுவையில் உள்ள 16-வது நிதிக்குழு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.