#cmvijay #hindumunnani #thanthitv திருப்பூரில் விநாயகர் சிலையை வழிப்பட்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இடையூறு ஏற்படுத்துவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.