அரசியல்

காமராஜர் சிலை பீடத்தில் பாஜக கொடி கட்டியதால் ஆத்திரம் - பாஜக-காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல்

சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் வந்த பொன் ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலை பீடத்தின் மீது இருந்த பாஜக கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக கொடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின்

செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிரச்சினை எழக்கூடாது என்பதற்காக பாஜக விட்டுக்கொடுத்து செல்வதாக தெரிவித்தார். மேலும் யார் எப்படி நடந்துகொண்டார்களோ அவர்களின் அநாகரீக செயலை காட்டுவதாகவும் கூறினார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்