பொள்ளாச்சி மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பெண்களின் நலனை பாதுகாக்காத, அவர்களுக்கு துணை நிற்காத, துயர்துடைக்க ஓடிவராத அரசு, அ.தி.மு.க. அரசு என்று குற்றம்சாட்டினார். மேலே இருக்கிறவரை கீழே இறக்கினால், கீழே இருக்கிறவர் தானாகவே தரைக்கு வருவார் என்றும் கரு. பழனியப்பன் கூறினார்.