அரசியல்

சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர் : ஜாமீன் நிபந்தனையிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் உள்ள நிபந்தனையை முழுமையாக விலக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் உள்ள நிபந்தனையை முழுமையாக விலக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக எம்.எல்.ஏ.கருணாஸ் இன்று காலை ஆஜரானார். உடல்நிலை சரியில்லாததால் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து முழு விலக்கு அளிக்கக்கோரி கருணாஸ் தரப்பில் , அப்போது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ரோஸ்லின் துரை அறிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு