கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு புதிய திட்டங்களைத் திறந்து வைக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் திறந்து வைத்து மாணவர்களிடையே அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, குளிரூட்டப்பட்ட நவீன பேருந்து நிலையம், புதிய பூங்கா மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும், வருவாய்த்துறை சார்பில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.