அரசியல்

கல்லூரி மாணவியை சாதியை சொல்லி திட்டிய பாமக கவுன்சிலர்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், சரண்ராஜ் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் சுரேஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கவுன்சிலர் சுரேஷ், தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று சரண்ராஜ் மற்றும் அவருடைய கடையில் பணிபுரியும் கல்லூரி மாணவியை தாக்கியதுடன் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில், கவுன்சிலரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவருடைய மனைவியை கைது செய்யாமல் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தனது கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிக்கப் போவதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ