தென்காசியில் சொத்துவரி கட்டாமல் இருந்த பேரூராட்சி மன்ற தலைவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் சுதா என்பவர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் சொத்துவரி கட்டவில்லை என பேரூராட்சி தலைவர் பதவியை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தவிட்டது.