"தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் மேலும் பல தொழிற்பூங்காக்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசித்தேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையை கொண்டு வருமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையால் பல நன்மைகள் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும். திருப்பூர், முக்கிய ஏற்றுமதி நகரமாக உள்ளது. திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரங்களை மேம்படுத்த முடிவெடுத்துள்ளோம்." - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு