அரசியல்

"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக ஏற்று செயல்படும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆணையத்திற்கு வேலையே இல்லை என்றார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்கள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்