அரசியல்

அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்

அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல்.

தந்தி டிவி
கடந்த 1999 மதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறையை, சரத்பவார் அண்ணன் மகனான அஜித்பவார் கவனித்த நிலையில், 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டு இருந்தது. எந்த நேரத்திலும் அஜித்பவார் சிறைக்கு செல்ல வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வந்த நிலையில், தற்போது அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே எந்த வழக்கும் கைவிடப்படவில்லை என,மாநில ஊழல் தடுப்பு காவல் இயக்குனர் பரம்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை