அரசியல்

``CAA சட்டத்தில்... இஸ்லாமியர்களுக்கு...'' அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது, மாறாக, குடியுரிமையை பறிக்க கொண்டுவரப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற்றவர்களுடன் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது, முந்தைய அரசுகளின் திருப்தி அரசியலால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டது என்று கூறினார்.

முந்தைய அரசுகள் ஊடுருவல்களை அனுமதித்து, அவர்களை சட்ட விரோதமாக குடிமக்களாக்கியது என்றும்,

ஆனால் சட்டத்தை பின்பற்றியவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும்,

மாறாக, குடியுரிமையை பறிக்கவில்லை என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தாம் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்