"திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்.."- CM விஜய்யை சந்தித்த பின் ஓபனாக சொன்ன மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தி.மு.க.விடம் பாஜக ஆதரவு கேட்கும் என சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அமைச்சர்கள் வன்னிஅரசு, சம்பத்குமார் ஆகியோர் அளித்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நீதி சங்கம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, திருமாவளவன் 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சேர்ந்து இருந்தால் அப்போதே சமூக நலத்துறை அமைச்சராக மாற்றி இருப்பேன் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்...