``TVK-வ நீங்க அடிப்பீங்க.. பாஜககிட்ட வருவீங்க.. அப்படிலாம் பாஜக சும்மா விடாது’’ - தீயாய் வைரலாகும் பரபரப்பு வீடியோ #tvk #bjp #tnelection2026 பறக்கும் படைக்கு ஒத்துழைக்கவில்லை என பாஜகவினர் மீது வழக்கு தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததாக பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கட்சி கொடிகள் வெளியே தெரியும்படி வந்த பாஜகவினரிடம் அவ்வாறு தெரிய கூடாது என தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தியும், ஒத்துழைப்பு தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், பாஜக பிரமுகர்களான முரளி மற்றும் முருகேசன் ஆகியோர் மீது தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.