தென்காசியில் ஒரு அடிப்படை வசதி பணியும் நடைப்பெறவில்லை எனக்கூறி பாஜக கவுன்சிலர் தோப்புக்கரணம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக கவுன்சிலர் சங்கர், உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பல்வேறு ஊழல் நடைபெறுவதாகவும், தனது வார்டில் எந்த வேலையும் முறையாக நடைபெறுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்... பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.