அரசியல்

ஐஸ்வர்யா ராய் கண்கள்.. பாஜக அமைச்சர் கூறிய சர்ச்சை கருத்து

தந்தி டிவி

மீன்களை அதிகம் சாப்பிடுவதால் ஐஸ்வர்யா ராய்க்கு அழகிய கண்கள் உள்ளதாக மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் குமார் காவித் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர அரசின் மாநில பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள விஜய்குமார் காவித் துலே, மீன் சாப்பிடுவதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஐஸ்வர்யா ராய் மீன் அதிகமாக சாப்பிடுவதால் தான், அழகான கண்கள் உள்ளது என்றார். இளைஞர்கள் மீன் சாப்பிட ஆரம்பித்தால் தோற்றம் அழகாவதுடன், பெண்களின் இதயங்களை எளிதில் வெல்ல முடியும் என பேசினார். மகாராஷ்டிர மாநில அரசின் பாஜக அமைச்சர் பேசிய இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை