அரசியல்

"மீண்டும் தோற்கடிக்க பீகார் மக்கள் தயாராக உள்ளனர்" - தர்பங்கா பொதுக் கூட்டத்தில் பிரதமர் தகவல்

பீகாரில் காட்டாட்சியை கொண்டு வந்தவர்களை மீண்டும் தோற்கடிக்க, மக்கள் தயாராகி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள ராஜ் மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பீகாரில் காட்டாட்சியை கொண்டு வந்தவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராகி உள்ளதாக தெரிவித்தார். இவர்கள் தான் பீகாரை சூறையாடியவர்கள் என்றும், அவர்களின் ஆட்சியில் தான் பீகாரில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெற்றதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சாடியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை