திமுகவின் கைக்கூலிகள் ராமதாஸ் உடன் இருந்து அவரின் மனதை குழப்பி கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அன்புமணி ராமதாஸின் உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காடுவெட்டு குரு இருந்திருந்தால் தற்பொழுது பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் இருந்திருக்காது என்று தெரிவித்தார்.